மக்கள் நலனுக்காக சிறப்பான திட்டம்..!! கொட்டும் மழையிலும் கண்டுக்காமல் களமிறங்கிய உதயநிதி!!
இன்று அதிகாலை முதலே சென்னையின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
Walk for Health
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் உள்ளோருக்கு பாதிப்புகளை குறைக்கும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டமாக நடைபயிற்சிப் பாதை திட்டத்தை தமிழ்நாடு அரசு வடிவமைத்துள்ளது.ஜப்பானிய மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்காக அந்நாட்டு அரசு ஹெல்த் வாக் சாலைகள் என்கின்ற பிரத்தியேக சாலைகளை உருவாக்கியுள்ளன.
அதனை அடிப்படையாக கொண்டே இந்த திட்டத்தை தமிழக அரசும் முன்னெடுத்துள்ளது. Walk for health என்ற இந்த திட்டத்தை இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் துவங்கி வைத்தார்.
குடையுடன் அமைச்சர்கள்
அவருடன் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நடைபயணமாது அடையாறு எஸ்பி சாலை மேம்பாலம் அருகில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி பூங்காவிலிருந்து துவங்கியது.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் 38 மாவட்டங்களில் பல்வேறு இடஙக்ளில் இந்த ஹெல்த் வாக் திட்டமானது துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களும், மேயரும் மற்றபிறரும் இதில் குடைபிடித்து படியே கலந்து கொண்டனர்.