இனி டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தாலும்.. ரயில்வே நிர்வாகம் அசத்தல் முடிவு
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்கு அளவு நிர்ணயிப்பது தொடர்பான முடிவை ரயில்வே வாரியம் எடுத்துள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட்
அனைத்து ரயிலிலும் காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அந்த ரயிலின் மொத்த இருக்கைகளில் 25 சதவீதத்திற்கு மட்டுமே இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ரயிலின் அனைத்து பிரிவுகளிலும் (ஏசி 1, 2, மற்றும் 3, ஸ்லீப்பர் மற்றும் சேர் கார்) மொத்த இருக்கைகளில் 25 சதவீதம் மட்டுமே ரயில்வேயால் காத்திருப்பு டிக்கெட்டுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு மற்றும் பல்வேறு பிரிவுகளின் இருக்கைகள் காத்திருப்பு டிக்கெட்டுகளை வழங்குவதில் சேர்க்கப்படாது.
நிர்வாக முடிவு
இந்த மாற்றம் அனைத்து வகை இருக்கைகளுக்கும் பொருந்தும். தட்கல் மற்றும் தொலைதூர இடங்களை முன்பதிவு செய்வதிலும் இந்த விதி செயல்படுத்தப்படும். சலுகை கட்டணங்கள் அல்லது அரசாங்க சலுகை வழங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு இந்த புதிய வரம்பு பொருந்தாது.
இந்த விதி செயல்படுத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன்பு அதிக எண்ணிக்கையிலான காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் காரணமாக, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கும் ரயிலில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது.
இது பயணிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியது. புதிய விதியின் மூலம், பயணிகள் தொந்தவு இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம்.