மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் 70% தள்ளுபடி? பின்னணி என்ன!
மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் 70% தள்ளுபடி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
70% தள்ளுபடி?
இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. தற்போது 70% தள்ளுபடி என்ற தகவலின் படி, அனைத்து வகுப்புகளிலும் - ஸ்லீப்பர், ஏசி மற்றும் சேர் கார் பொருந்தும்.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் அடங்குவர். எக்ஸ்பிரஸ், அஞ்சல் மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் சேவைகள் உட்பட அனைத்து ரயில்களிலும் இந்தத் திட்டம் செல்லுபடியாகும்.
உண்மை என்ன?
இந்த சலுகையை பெற தனிநபர்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் வயது மற்றும் அடையாளச் சான்றுகளை வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் தள்ளுபடியைச் சேர்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் டிக்கெட் முன்பதிவு முறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை வயதான குடிமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குடும்ப வருகைகள், புனித யாத்திரைகள் அல்லது ஓய்வுக்காக அடிக்கடி பயணிப்பதை ஊக்குவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.