இனி ரயிலில் கடைசி நேர சிக்கலே இருக்காது - பயணிகள் பட்டியலில் புதிய நடைமுறை
24 மணிநேரத்திற்கு முன்பே பயணிகளின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
டிக்கெட் முன்பதிவு
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தோருக்கான, CHART LIST ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு வெளியிடப்படுகிறது. இதனால் டிக்கெட் உறுதி செய்யப்படாதவர்கள்,
மாற்று ஏற்பாடு செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து கடந்த மாதம் 21 ஆம் தேதி ராஜஸ்தான், பிகானெருக்கு பிரதமர் மோடி சென்ற போது, இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதிப் பட்டியல்
அதன்படி முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், பிகானெர் ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட ஒரு ரயிலில் மட்டும் 24 மணிநேரத்திற்கு முன்பே பயணிகளின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையின் சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்த பிறகே, நாடு முழுவதும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இது, தட்கல் முறையில் முன்பதிவு செய்வதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.