மக்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்; அவர்களுக்காக பேசுகிறேன் - சசிகலா

DMK V. K. Sasikala
By Karthikraja Aug 13, 2024 05:00 PM GMT
Report

சசிகலா நெல்லையில் தொண்டர்கள் முன் உரையாற்றினார்.

சசிகலா

'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் தென்காசிக்கு சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து உரையாற்றினார். 

vk sasikala latest speech

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கு மேளதாளங்களுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் - சசிகலா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் - சசிகலா குற்றச்சாட்டு

சட்ட ஒழுங்கு

சசிகலா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, “மக்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக பேசுகிறேன். திமுக அரசு செய்யும் தவறுகளை எடுத்துக்காட்டி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். நெல்லையில் 4 ஆண்டுகளில் 240 கொலைகள் நடந்துள்ளன. 

vk sasikala

சட்டம், ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை. மக்களுக்கு நல்லது செய்யாமல் நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் சண்டை போடுகிறார்கள். ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை என மக்கள் கூறுகிறார்கள். இந்த ஆட்சியில் எதை எடுத்தாலும் ஊழலாக உள்ளது. என பேசினார்.