வாடகை வீடு எடுத்து பாலியல் தொழில் - அதிமுக மகளிரணி நிர்வாகி கைது!

Tamil nadu AIADMK Crime
By Sumathi Jan 31, 2023 07:59 AM GMT
Report

பாலியல் தொழில் செய்த வழக்கில் அதிமுக மகளிரணித் துணைத் தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக நிர்வாகி

விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (42) இவரது மனைவி அமல்ராணி‌, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவியாக உள்ளார். இருவரும், பேராலி ரோடு ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

வாடகை வீடு எடுத்து பாலியல் தொழில் - அதிமுக மகளிரணி நிர்வாகி கைது! | Virudhunagar Admk Party Couple Prostitution Case

தொடர்ந்து அங்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பாலியல் தொழில்

அதில், சிவகாசியைச் சேர்ந்த ஹரிபாலகுமார்(24) மற்றும் சாத்தூர் அருகே மேட்டமலையைச் சேர்ந்த கற்பகவல்லி (29) ஆகியோர் முரணான பதிலை அளித்துள்ளனர். அதனால் அவர்களை கைது செய்து விசாரித்ததில் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன் அடிப்படையில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி மற்றும் அவரது கணவர் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்தனர்