டி20 தொடர்...அதற்கு பிறகு யாரும் என்னை பார்க்கவே முடியாது - ஓய்வு குறித்து அதிர்ச்சியளித்த விராட்!!
இந்திய அணி அடுத்து உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடவுள்ளது.
விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விரட்ட கோலி இந்திய அணி விளையாடவுள்ள உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அதனை இந்திய அணிக்காகவும் தொடர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல முன்னணி வீரர்களும் அவர் ஓப்பனிங் இறங்கவேண்டும் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்த சூழலில், பெங்களூரு அணி ஐபிஎல் தொடரின் Play off சுற்றிற்கு முன்னேற தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. விராட் கோலி 35 வயதை அடைந்து விட்ட நிலையில், அவ்வப்போது அவற்றின் ஓய்வு குறித்து பேசப்பட்டு வருகின்றது.
ஓய்வு
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்ற கருத்தும் உள்ளது. இந்த நிலையில் திடீரென ஓய்வு குறித்து பேசி ரசிகர்களை அதிரவைத்துள்ளார் விராட்.
அவர் பேசும் போது, ஒவ்வொரு முறையும் வெற்றிபெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது என குறிப்பிட்ட விராட், ஒரு வீரராக அனைவருக்கும் ஓய்வு என்பது நிச்சயம் என கூறினார்.
கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி விளையாடி இருக்கலாம் என்ற சிந்தனையுடன் தான் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பவில்லை என தெரிவித்து இதனை செய்திருக்கலாம் என பின்னர் வருத்தப்பட கூடாது என்றும் தான் நினைப்பதாக கூறி, ஓய்வை அறிவித்துவிட்டு கிரிக்கெட் களத்தை விட்டு வெளியேறினால், யாரும் என்னை பார்க்கவே முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதன் காரணமாக, களத்தில் இருக்கும் வரை, 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறி, அதுவே தன்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது என்று தெரிவித்தார்.