இந்திய அணியை விட்டு விலகி இருக்கும் கோலி - இதுதான் காரணமாம்..!
இந்திய அணியை விட்டு விலகி இருக்க விராட் கோலி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் போட்டி
இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி லண்டனில் குடியேறி வசித்து வருகிறார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள மைதானங்களில் இந்திய அணி ஆடும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனை காண விராட் கோலி நேரில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கோலியின் முடிவு
ஆனால் கோலி இந்திய அணியின் போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீதான புகழ் வெளிச்சம் அதிகரித்து,
அது அவரது குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால், அவர் மைதானத்திற்குச் செல்வதை தவிர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்திய அணி வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் புதிய கேப்டன் சுப்மன் கில் ஆகியோரைத் தனது வீட்டிற்கு அழைத்து விராட் கோலி விருந்தளித்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.