ரொனால்டோவா.. மெஸ்ஸியா? சுந்தர் பிச்சை கூறிய சுவாரஸ்ய பதில்
சுந்தர் பிச்சை தனக்கு பிடித்த கால்பந்து வீரர் குறித்த தகவல் தெரிவித்துள்ளார்.
யார் பிடிக்கும்?
கால்பந்து உலகின் இருபெரும் ஜாம்பவான்கள் தான் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி. இருவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தனக்கு எந்த கால்பந்து வீரர் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சை, எனக்குப் பிடித்தது மெஸ்ஸி தான். ஆனாலும் ரொனால்டோவின் திறமையும், தன்னலம் இல்லாத உழைப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
சுந்தர் பிச்சை பதில்
மெஸ்ஸி பந்தைப் பிடிக்கும் தருணத்தில் ஏற்படும் அந்த மாயை சொல்லவே முடியாது. அதைப் பார்த்தால் தான் உணர முடியும். அவர் வயதானபோதும் பந்துடன் அவர் அவர் கையாளும் மாயை வியப்பூட்டுவதாக இருந்தது. தனது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் எங்கள் வீட்டில் எல் கிளாசிகோ (பார்சலோனா-ரியல் மாட்ரிட் போட்டி) பார்ப்பது ஒரு தனி அனுபவம்.
தனது குடும்பத்தில் கூட இந்த விவாதம் அதிகம் தொடர்கிறது. கூகுளை வழிநடத்துவது மாட்ரிட் கோச் ஆக இருப்பதைப்போல் தான்.. சில சீசன்கள் மோசமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.