என்னை அப்படி கூப்பிடாதீங்க; அதை கேட்டாலே.. - விராட் கோலி வேண்டுகோள்!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடர்
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளனர். இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
கோலி வேண்டுகோள்
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அன்பாக்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய விராட் கோலி, தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது "என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது. இனிமேல் என்னை விராட் என அழைத்தால் போதும்" என்று தெரிவித்துள்ளார்.