பட்டைய கிளப்பிய இந்திய அணி வீரர்கள்: ஸ்கெட்ச் போட்ட கோலியின் போர்ப்படை

india test australia pakistan
By Jon Mar 06, 2021 11:12 AM GMT
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் யார் மோதப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4ஆவது டெஸ்ட் அகமதாபாத்தில் தொடங்கியது. முந்தைய போட்டியில் 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது.

இதனையடுத்து இங்கிலாந்து சுழல் படையில் சிக்கி இந்தியா வீழ்ந்துவிடும் என்ற நினைப்பில்இருந்த இங்கிலாந்திற்கு பண்டும் சுந்தரும் மண்ணள்ளி போட்டார்கள். பண்ட்-சுந்தர்-அக்சர் என மூவரும் இங்கிலாந்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தனர் இறுதியில் இந்தியா 365 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தை விட 160 ரன்கள் முன்னிலை பெற்றது.

அப்போதே இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது.