என்ன ஆடுற நீ? சொதப்பலாக அவுட்டாகிய பண்ட் - கோபத்தை கொட்டி தீர்த்த விராட்!!
விராட் கோலி இளம் வீரர் ரிஷப் பண்ட்டிடம் கோவித்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரிஷப் அவுட்
இந்தியா அணி வங்காளதேசத்திற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனர்களான ரோகித் 23(11), விராட் 37(28) ரன்களை எடுத்து வெளியேறிய நிலையில், ரிஷப் பண்ட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரும் 24 பந்துகளில் 36 ரன்களை எடுத்து அவுட்டாகினார். இது பெவிலியனில் அமர்ந்திருந்த விராட் கோலியை அதிருப்தி அடைய செய்தது. ரிஷப் அவுட்டானதுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் விராட்.
மேலும், ரிஷப் பெவிலியன் வந்த போதும் தனக்கு இருந்த கோபத்தை வெளிப்படையாக காட்டினார் விராட். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தியா வெற்றி
20 ஓவர்களில் 196/5 இந்திய அணி எடுக்க, பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 146/8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
— Bangladesh vs Sri Lanka (@Hanji_CricDekho) June 22, 2024
இது வரை சூப்பர் 8 சுற்றில் 2 போட்டிகள் - ஆப்கனிஸ்தான், வங்காளதேசம் அணிகளை எதிர்கொண்ட இந்தியா 2'லும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் இந்தியா - ஆஸ்திரேலியா அணியுடன் மட்டுமே மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
— Bangladesh vs Sri Lanka (@Hanji_CricDekho) June 22, 2024