T20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு கவலையடைந்த விராட் கோலி மகள் - அனுஷ்கா ஷர்மா நெகிழ்ச்சி பதிவு

Virat Kohli Team India Anushka Sharma T20 World Cup 2024
By Karthikraja Jun 30, 2024 11:01 AM GMT
Report

 இந்திய அணி T20 கோப்பை வென்ற பிறகு அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை

17 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை கோப்பையை வென்றுள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்திய அணிக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய ரசிகர்கள் இரவு முதல் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

india team T20 worldcup

வெற்றிக்கு பின்னர் விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து, அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , விராட் கோலியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ நான் இந்த மனிதனை விரும்புகிறேன் (வீராட் கோலி) . உங்களை என் அன்பான வீடு என்று அழைப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோஹித் சர்மா - சோகத்தில் இந்திய ரசிகர்கள்

ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோஹித் சர்மா - சோகத்தில் இந்திய ரசிகர்கள்

அனுஷ்கா ஷர்மா

மேலும் மற்றொரு பதிவில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோப்பையுடன், உணர்ச்சியில் கட்டி அணைத்து கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து, “எங்கள் மகளின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், எல்லா வீரர்களும் டிவியில் அழுவதைப் பார்த்த பிறகு அவர்களைக் அன்பாக அணைத்துகொள்ள யாராவது இருந்தால்.. ஆம், என் அன்பே, அவர்களை 1.5 பில்லியன் மக்கள் அன்பாக அணைத்துகொண்டுள்ளனர். என்ன ஒரு அற்புதமான வெற்றி!! சாம்பியன்ஸ் – வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். 

அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடையே 2018 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2021 ம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.