கங்கை வெள்ளத்தில் தன் உயிரை பணயம் வைத்து பாகவனின் உயிரை காப்பாற்றிய யானை - அதிர்ச்சி வீடியோ வைரல்
Viral Video
Elephant
By Nandhini
வைரல் வீடியோ -
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீகார் மாநிலத்தில் உள்ள கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த வெள்ளத்தில், பாகனுடன் சேர்ந்து யானையும் சிக்கிக்கொண்டது. ஆனால், யானை தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நதியை கடந்து பாகனின் உயிரைக் காப்பாற்றியது.
தற்போது சமூகவலைத்தளங்களில், கங்கை ஆற்றில், யானை மூழ்கி, மூழ்கி நீந்தி பத்திரமாக பாகனை கரை சேர்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் யானையின் இந்த செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வீடியோ பார்ப்போர் நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது.
