சிறுவனுக்கு அட்வைஸ் செய்த இளைஞர்..நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம் - நடந்தது என்ன?

Crime Bomb Blast Viluppuram
By Vidhya Senthil Oct 08, 2024 01:37 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 சிறுவனுக்கு அறிவுரை கூறிய இளைஞர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் மாதவன் .இவருக்கு வயது 20. கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் நண்பராகப் பழகி வந்துள்ளார்.

viluppuram

அந்த சிறுவன் அடிக்கடி காலணியைச் சேர்ந்த தவறான பழக்கம் உள்ள இளைஞர்களுடன் பழகி வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மாதவன் அந்த சிறுவனை அழைத்து சேவியர் காலணியைச் சேர்ந்த தவறான பழக்கம் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து ஏன் ஊர் சுற்றுகிறாய் எனப் பல அறிவுரைகளைக் கூறியுள்ளார்.

திருமணத்தில் dj போட்ட பாட்டு - பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் தகராறில் நேர்ந்த கொடூரம்!

திருமணத்தில் dj போட்ட பாட்டு - பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் தகராறில் நேர்ந்த கொடூரம்!

இதனை அந்த சிறுவன், சம்மந்தப்பட்ட அந்த நபர்களிடம் கூறியுள்ளார். இதனால், மாதவன் மீது ஆத்திரமடைந்த இளைஞர்கள் மாதவன் வீட்டு வாசல் கதவின் மீது வீசி நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாதவன் குடும்பத்தினர் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நாட்டு வெடிகுண்டு

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ரொசாரியா, ஜேம்ஸ், துரைப்பாண்டி, நாட்டு வெடிகுண்டு வீசி வெடிக்கச் செய்தது தெரியவந்தது.

bomb attack

மேலும் சிறுவன் மீது விழுப்புரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து காப்பகத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதால், அந்த 3 பேரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.