பயங்கர நில அதிர்வு...சாலையில் சிதறி கிடந்த உடல்கள்- தமிழகத்தை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து!

Crime Accident Tiruppur
By Vidhya Senthil Oct 08, 2024 11:32 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 திருப்பூரில் ஏற்பட்ட பயங்கர வெடிச்சம்பவத்தில், 3 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி, பொன்விழா நகரில் ஒரு வீட்டிலிருந்து இன்று மதியம் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. ஒரு கிலோமீட்டருக்கும் அப்பால் வெடிச் சத்தம் கேட்டதால் பலத்த நில அதிர்வும் ஏற்பட்டது. வெடிவிபத்து நடந்த இடத்தில் அருகில் உள்ள 8 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

tiruppur fire accident

இடிந்து விழுந்த வீடுகளுக்குள் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன.குழந்தைகள் உட்பட நால்வர் படுகாயத்துடன் கிடந்தனர். தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

22 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தந்தை - காத்திருந்து பழி தீர்த்த மகன்

22 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தந்தை - காத்திருந்து பழி தீர்த்த மகன்

இந்த சம்பவம் குறித்துத் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 வெடிவிபத்து 

அவர்களுடன் தடய அறிவியல் நிபுணர்களுடன் திருப்பூர் காவலர் ஆணையர் லட்சுமி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் கார்த்திக்கின் மனைவி சத்யபிரியா, சத்ய பிரியாவின் சகோதரர் சரவணகுமார் இவர் கோவில் திருவிழாவுக்கான வெடிகளைத் தயாரித்த போது இந்த சம்பவம், நடந்துள்ளது.

bomb explosion

இந்த விபத்தில் ஒன்பது மாதம் குழந்தை மற்றும் பெண் உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து அறிவியல் பூர்வ ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் திருப்பூர் காவல்துறை ஆணையர் லட்சுமி தெரிவித்து உள்ளார்.