7 முறை கருக்கலைப்பு; அவர் முன்னாடிதான் சீமானுடன் கல்யாணம் - கதறிய விஜயலட்சுமி!

Vijayalakshmi Seeman
By Sumathi Aug 29, 2023 03:46 AM GMT
Report

சீமான் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாக விஜயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி 

சென்னையில் சீமான் மீது நேற்று போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக சீமானும் நானும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம்.

7 முறை கருக்கலைப்பு; அவர் முன்னாடிதான் சீமானுடன் கல்யாணம் - கதறிய விஜயலட்சுமி! | Vijayalakshmis Major Charges Against Seeman

அப்போது தாம் பெரியாரிஸ்ட், கிறிஸ்தவர் என்பதால் மாங்கல்யம் அணிவிக்க முடியாது; மாலை மட்டும் மாற்றிக் கொள்வோம். அதுவே திருமண அடையாளம் என்றார்.

குற்றச்சாட்டு

மதுரையில் மாலை மாற்றி திருமணம் செய்த போது இப்போதைக்கு இதனை வெளியே தெரிவிக்க வேண்டாம். தலைவர் பிரபாகரன் முன்னிலையில் உலகம் அறிய பிரம்மாண்டமான திருமணம் நடத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.

7 முறை கருக்கலைப்பு; அவர் முன்னாடிதான் சீமானுடன் கல்யாணம் - கதறிய விஜயலட்சுமி! | Vijayalakshmis Major Charges Against Seeman

  சீமான் எனக்கு ரூ1 கோடி கொடுக்கவில்லை. எனக்கு சீமான் தரப்பில் இருந்து ரூ3.5 லட்சம் மட்டுமே தந்துள்ளனர். அதற்கான ஆதாரம் இருக்கிறது. பிரபாகரன் பெயரை உச்சரித்துக் கொண்டு திமிர்த்தனமாக பேசுகிறார். பிரபாகரனின் பெயரை இழிவுபடுத்துகிறார்.

எனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தவர் சீமான். என் அனுமதியில்லாமல் கருவை சிதைத்தவர். என்னை தற்கொலைக்குத் தூண்டியவர். மதுரை செல்வம் என்னை பற்றி இழிவாக, தவறாக பல செய்திகளைப் பரப்புகிறார். மதுரை செல்வத்தால் என் உயிருக்கு ஆபத்து.

எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். சீமான் இரக்கமற்ற மனிதர். அவருடைய மனைவியான என்னையே மோசமான நபராக சித்தரிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

You May Like This Video