GST வரி உயர்வு - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

Vijayakanth
By Nandhini Jul 21, 2022 06:59 AM GMT
Report

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ந் தேதி வரை நடைபெற உள்ளது.

அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு

இந்நிலையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளது. இதனால், 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். GSTவரி உயர்வை கண்டித்து தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அனைத்து பொருட்களின் விலை உயர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு GST வரி உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்காமல் மக்கள் வயிற்றில் அடிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

vijayakanth