இது 5-வது ஆம்புலன்ஸ்.. எனக்கு பின்னால் உதவுவது யார் தெரியுமா..? பாலா சொன்ன பதில்!

Tamil Cinema Tamil nadu KPY Bala Tamil Actors
By Jiyath Jan 31, 2024 07:08 AM GMT
Report

வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை பாலா வழங்கியுள்ளார். 

பாலா

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' மற்றும் 'குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா.

இது 5-வது ஆம்புலன்ஸ்.. எனக்கு பின்னால் உதவுவது யார் தெரியுமா..? பாலா சொன்ன பதில்! | Vijay Tv Bala Donates 5Th Ambulance To Neknamalai

இவர் சமீப காலமாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். சில கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ்களையும் வழங்கி வருகிறார். மேலும் மிக்ஜாம் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது நிதியுதவியும் வழங்கினார்.

பாலாவின் இந்த செயல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

கூகுள் மேப்பை நம்பி குறுக்கு வழியில் சென்ற சுற்றுலா பயணிகள் - சிக்கிய சொகுசு கார்!

கூகுள் மேப்பை நம்பி குறுக்கு வழியில் சென்ற சுற்றுலா பயணிகள் - சிக்கிய சொகுசு கார்!

எனக்கு பின்னால் யார்..?

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா "இந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஒரு கர்ப்பிணி பெண்ணை கயிறு கட்டி கீழே இறக்கியதாக ஒரு செய்தி பார்த்தேன்.

இது 5-வது ஆம்புலன்ஸ்.. எனக்கு பின்னால் உதவுவது யார் தெரியுமா..? பாலா சொன்ன பதில்! | Vijay Tv Bala Donates 5Th Ambulance To Neknamalai

இங்கு வந்து பார்த்தபிறகு தான் தெரிந்தது, அப்படி கயிறு கட்டி இறக்கும்போது நிறைய பெண்களுக்கு பாதி வழியிலேயே பிரசவம் ஆகிவிடுறது என்று. இந்த கிராமத்துக்கு ஏறிவருவதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே இந்த ஐந்தாவது ஆம்புலன்ஸை இந்த கிராமத்துக்கு வழங்கியுள்ளேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தருபவர்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.

நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆமாம், இருக்கிறார்கள் தான். அது அவமானம், கஷ்டம் ஆகியவை. இவையெல்லாம் என் பின்னால் இருந்ததால்தான் நான் இந்த உதவிகளை செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.