ஆம்புலன்ஸ்...மழைக்கு நிவாரணம் - இப்போ 3 லட்சத்துக்கு....!! அள்ளி அள்ளி கொடுக்கும் KPY பாலா..!

KPY Bala Chengalpattu
By Karthick Jan 02, 2024 05:02 AM GMT
Report

தேடி தேடி சென்று உதவிகள் செய்திடுவதில் தொடர்ந்து சின்னத்திரை கலைஞரும், நடிகருமான KPY பாலா தனித்து நிற்கிறார்.

KPY பாலா

சின்னத்திரை காமெடி கலைஞராக அறிமுகமாகி தற்போது பெரிய திரையிலும் நடித்து வரும் பிஸி நடிகராக KPY பாலா மாறியுள்ளார்.


பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையில் உதவிகளை செய்து வரும் நிலையில், இவரோ உதவி செய்திடுவதற்காகவே தனியாக சம்பாதித்து வருகிறார்.

kpy-bala-setting-up-3lac-water-treatment-plant

முன்னர், சரியாக போக்குவரத்து வசதி இல்லாதவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த நிலையில், அதனை தொடர்ந்து, வெள்ள மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

3 லட்சத்தில்...

இந்நிலையில், தற்போது அதனை தொடர்ந்து 3 லட்ச ரூபாயில் அவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார்.

kpy-bala-setting-up-3lac-water-treatment-plant

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைந்துள்ள கோட்டைகயப்பாக்கம் என்ற கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர் இருப்பதால், தங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து தரும்படி கோரிக்கை வைத்து அந்த கிராமத்தினர் பாலாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி இந்த மனு கிடைத்த நிலையில், நேற்று (01-01-2024) ஊருக்காக புதியதாக சுத்திகரிப்பு நிலையத்தை அமுதவாணனுடன் சேர்ந்து பாலா அமைத்து கொடுத்துள்ளார். இவருக்கு பலரும் தற்போது தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்.