கட்சி'ய யாரு வேணாலும் ஆரம்பிக்கலாம்...ஆனால்..! விஜய் பேச்சு!! ஜெயக்குமார் கருத்து!!
நேற்று விஜய் அரசியல் குறித்து சூசகமாக பேசிய நிலையில், தமிழக அரசியலில் இது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
விஜய் அரசியல் பேச்சு
லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் பேசிய நடிகர் விஜய், வரும் 2026-இல் காப்பு முக்கியம் என கூறியது அவர் அரசியலலையே குறிவைத்து பேசினார் என பரவலாக கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றது.
அதே போல, உங்களுக்காக சேவை செய்யும் ஆள் தான் தளபதி என அவர் கூறியதும் அரசியலை மையப்படுத்தியே தான் அரசியல் வல்லுநர்களை தவிர்த்து பொது மக்களும் பேச துவங்கியுள்ளனர்.இந்நிலையில், இது குறித்து அதிமுகவின் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஜெயக்குமார் கருத்து
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அதற்கு அனைவரும் உரிமை உண்டு என கூறிய ஜெயக்குமார், அவரின் கருத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தெரிவித்துள்ளார் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்.
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் ஆனால் அங்கீகாரம் மக்கள் தான் அளிக்கவேண்டும் என தெரிவித்த அவர், அதே நேரத்தில் 31 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்துள்ளது என்பதை குறிப்பிட்டு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதே போல, தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்ற அவர், எம்.ஜி.ஆர் என்பவர் ஒரு சகாப்தம் என்று புகழாரம் சூட்டி, யாரும் - எவரும் அவருக்கு இணையாக முடியாது என்றார். விஜய் கட்சி ஆரம்பித்தால் அவர் அதிமுகவிற்கு அச்சுறுத்தலாக இருப்பாரா என்று தொகுப்பாளர் வினவிய போது, அப்படியெல்லாம் இருக்கப்போவதில்லை என கூறி, அதிமுகவிற்கு விஜய் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்றார்.