"மொத்த மனித இனத்தையுமே அவமானப்படுத்தும் செயல்"!! நெல்லை கொடூரம்..இபிஎஸ் கண்டனம்!!

ADMK Edappadi K. Palaniswami Tirunelveli
By Karthick Nov 02, 2023 07:08 AM GMT
Report

நெல்லையில் நடைபெற்ற சாதி வன்கொடுத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் கொடூரம்

நெல்லை மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கி உடமைகளை பறித்து நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

edapadi-pazhanisamy-slams-nellai-caste-issue

இந்நிலையில் இது குறித்து தற்போது தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது , இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.

எம்ஜிஆரின் 'உலகம் சுற்றும் வாலிபனில்' எடப்பாடி பழனிசாமி - பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு!

எம்ஜிஆரின் 'உலகம் சுற்றும் வாலிபனில்' எடப்பாடி பழனிசாமி - பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு!

எடப்பாடி கண்டனம்

இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல். ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல், காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.