2026 பேச்சு - கிளம்பிய சர்ச்சை..விஜய் ஜெயிலுக்கு கூட போகலாம்!! பகிர் தகவல் சொன்ன பிரபலம்!!
நடிகர் விஜய்யின் நேற்றைய பேச்சே தற்போது தமிழகத்தின் ஹாட்டாபிக்காக மாறியுள்ளது.
விஜய் லியோ பேச்சு
லியோ படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், நேற்று படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் பேசிய விஜய் 2026-இல் காப்பு முக்கியம் பிகிலு என பேசியது பெரும் அதிர்வலைகளை தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அதிமுகவின் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் சீமான், பாஜகவின் அண்ணாமலை என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு இது குறித்து பேட்டி அளித்த பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் திடுக்கிடும் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக இது குறித்து பேசிய அவர், 2026-இல் விஜய் அரசியலுக்கு வருவது நிஜம் என கூறி, அதற்கான அடித்தளத்தை அவர் அமைத்து வருகிறார் என்றார். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு விருது வழங்கியது அதற்கான முதல் கட்டம் என்றார்.
ஜெயிலுக்கு கூட விஜய் போகலாம்
ஆரம்பகாலகட்டத்தில் எஸ்.ஏ.சி'யின் நோக்கம் இதுவாகவே இருந்தது என குறிப்பிட்டு, அதனை நோக்கி தான் விஜய் தற்போது பயணித்து கொண்டிருக்கிறார் என்றார். கட்சி என வந்தால், அவர் நிறைய ரசிகர்களை இழக்கவேண்டி இருக்கும் என சுட்டிக்காட்டிய கே.ராஜன், மேலும் எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை அவர் எதிர்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
ஆனால் ஒருபோதும் எம்.ஜி.ஆர் மாதிரி இல்ல என்ற அவர், மக்களிடமும் ரசிகர்களிடமும் எம்.ஜி.ஆர் காட்டிய அன்பை 20 சதவீதம் கூட விஜய் காட்டவில்லையே என்றார். மேலும், கட்சி துவங்கினால், மத்திய அரசால் கைதாகி சிறைக்கு செல்லும் நிலைக்கு கூட விஜய் செல்லலாம் என அதிரடியாக தெரிவித்த கே.ராஜன், இன்னும் விஜய் நிறைய அரசியல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.