எம்.ஜி.ஆரே கட்சி ஆரம்பிக்க பயந்தாரு...வந்தா நின்னு சண்டை செய்யணும்!! விஜய்க்கு சீமான் அட்வைஸ்

Vijay M G Ramachandran Seeman
By Karthick Nov 02, 2023 08:00 AM GMT
Report

நடிகர் விஜய் அரசியல் குறித்து நேற்று சூசகமாக பேசிய நிலையில், அது பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கருத்து

லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய், 2026-இல் காப்பு முக்கியம் என பேசியதே தற்போது ட்ரெண்டிங் டாப்பிக். அரசியல் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் விஜய், அது குறித்தே மறைமுகமாக பேசினார் என கருத்துக்களை விவாதிக்கப்பட்டு வருகின்றது.

seeman-says-easily-one-can-win-in-politics

இந்நிலையில் தான் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, அரசியல் களத்திற்கு வரும் ஒவ்வொருத்தருடைய நோக்கமும் வெல்ல வேண்டும் என்பதுதான் என கூறி, வெற்றி பெற வேண்டும், அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கம் இருக்கக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது என்றார்.  

seeman-says-easily-one-can-win-in-politics

தம்பி விஜய்யின் அந்த கனவை நாம் வாழ்த்த வேண்டும் என்ற சீமான், விஜய் எடுத்து வைக்கும் கோட்பாடு மற்றும் கொள்கைகளை மக்கள் ஏற்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தொடங்கியதுமே அதிகாரத்திற்கு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறினார்.

கட்சி'ய யாரு வேணாலும் ஆரம்பிக்கலாம்...ஆனால்..! விஜய் பேச்சு!! ஜெயக்குமார் கருத்து!!

கட்சி'ய யாரு வேணாலும் ஆரம்பிக்கலாம்...ஆனால்..! விஜய் பேச்சு!! ஜெயக்குமார் கருத்து!!

அதெல்லாம் புரட்சி  

எம்ஜிஆர், என்டிஆரை பார்த்து எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர்கள் வந்தது விபத்தே என்ற சீமான், விபத்து விதியாகாது என்று தெரிவித்து, எம்ஜிஆர் கட்சியை கட்டமைத்து வைத்திருந்ததால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்றும் எம்ஜிஆரே கட்சித் தொடங்க பயந்தார் என அதிரடியாக கருத்து தெரிவித்தார்.

seeman-says-easily-one-can-win-in-politics

எம்ஜிஆரை பார்த்து என்டிஆர் தொடங்கினார் என சுட்டிக்காட்டி, ஆனால் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் முடியவில்லை என்று கூறி, விஜயகாந்த் வலிமையாக இருந்தார் , ஆனால் தனித்து நிற்காமல் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் சரிந்துவிட்டது என கூறினார்.

seeman-says-easily-one-can-win-in-politics

நின்று சண்டை செய்ய வேண்டும் கட்சி தொடங்கியதுமே அதிகாரத்துக்கு வர முடியாது போன்ற அட்வைஸ் செய்த சீமான், கட்சி தொடங்கிய உடனே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்றால் அதெல்லாம் புரட்சி. அப்படியான நிலை இப்போது உள்ளதா என்பதை யோசிக்க வேண்டும் என தனது கருத்தை தெரிவித்து சென்றார்.