10 வருசம் கழிச்சு தூக்குல போடாம, ரயில்ல தள்ளிவிட்டு தண்டியுங்க - கொந்தளித்த விஜய் ஆண்டனி

Vijay Antony Attempted Murder Chennai Death
By Sumathi Oct 14, 2022 01:46 PM GMT
Report

மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

மாணவி கொலை

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.

10 வருசம் கழிச்சு தூக்குல போடாம, ரயில்ல தள்ளிவிட்டு தண்டியுங்க - கொந்தளித்த விஜய் ஆண்டனி | Vijay Antony Tweet About Student Murder Case

இந்நிலையில், சந்தியாவிடம் பேசுவதற்காக அவரை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் திடீரென சந்தியாவை அந்த வழியாக வந்த மின்சார ரயிலில் தள்ளியுள்ளார்.

தந்தை இறப்பு

இதில் மின்சார ரயிலில் மோதி பலத்த காயமடைந்த சந்தியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து சதீஷ் தப்பியோடினார். அதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சதீஷை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னை துரைபாக்கத்தில் பதுங்கியிருந்த சதீஷை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து மகள் சத்யாவின் மரணத்தால் மனஅழுத்தத்திற்கு ஆளான அவரது தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

விஜய் ஆண்டனி ட்வீட்

இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து,

உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.