பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான் இருப்பாங்க - போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

Nayanthara Vignesh Shivan
By Sumathi Jan 11, 2024 08:36 AM GMT
Report

நயன்தாரா சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பம் முதல் தற்போது வரை ஹாட் டாப்பிக்கிலேயே இருந்து வருகிறார். விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

vignesh-shivan - nayanthara

அதற்கு பிறகும் கேரியரில் பிஸியாகவே இருந்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்கினார். மேலும், நடிப்பில் மட்டுமின்றி பிற தொழில்களிலும் கவனம் செலுத்தி முதலீடு செய்துவருகிறார்.

அந்த வகையில், அவரும், விக்னேஷ் சிவனும் இணைந்து 9 ஸ்கின் என்ற நிறுவனத்தையும், Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், Femi 9 பிராண்டின் தொடக்க விழா நடந்தது. அதில் பேசிய விக்னேஷ் சிவன், "முன்பெல்லாம் இது என் அம்மாவும், அண்ணியும் பயன்படுத்திய விஷயம்.

அந்த படத்துல நடிச்சுருக்கவே கூடாது - இன்று வரைக்கும் ஃபீல் பண்ணும் நயன்தாரா!

அந்த படத்துல நடிச்சுருக்கவே கூடாது - இன்று வரைக்கும் ஃபீல் பண்ணும் நயன்தாரா!

Femi 9 

நானே பல முறை இதனை வாங்கி கொடுத்திருக்கிறேன். ஆனால் உள்ளே என்ன இருக்கிறது எப்படி இருக்கும் என்பது தெரியாது. பொதுவாக கையில் ஏதாவது கிடைத்தால் அதை விளம்பரம் செய்பவர் நயன் தாரா கிடையாது. 8 மாதங்கள் அதை பயன்படுத்தினார். அவர் ஒரு விஷயத்தை பற்றி வெளியே பேச ஆரம்பித்தால் அது அவருடைய இதயத்திலிருந்து தெளிந்த பிறகுதான் பேசுவார்.

femi 9

அதனையடுத்து அக்கா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இதனை கொடுத்தேன். அவர்களும் அதை பயன்படுத்திவிட்டு பாசிட்டிவ் கருத்துக்களையே சொன்னார். அப்படித்தான் இந்தத் தயாரிப்பு ஃபெமி 9 என்ற பெயரில் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களின் மனநிலை மாறுவது பொதுவானதுதான்.

எனக்கும் அதைப் பற்றிய பெரிய யோசனை எதுவும் இல்லை. அந்த மாதிரியான சமயங்களில் எனது மனைவியும் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருப்பார். ஓரிரு வாரங்கள் கழித்து சாதாரணமாகிவிடுவார்" எனத் தெரிவித்துள்ளார். 

You May Like This Video