மறுவீட்டுக்கு சென்ற விக்னேஷ் நயன்தாரா - திரும்பும் பக்கம் எல்லாம் படு கவனிப்பு..!
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் தனது பிறந்த வீடான கேரளாவிற்கு சென்றார்.அங்கு வந்த அவரது உறவினர்கள் இருவரையும் ஜோராக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 ஆண்டு காதல்
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும்,
பல இடங்களுக்கு ஒன்றாக சென்று ஒருவருக்கு ஒருவர் மனதார புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை காதலித்து வந்தனர்.
எங்கு சென்றாலும் தனது காதலுடனே நயன்தாரா செல்ல தொடங்கினார்.பல நிகழ்ச்சிகளில் இருவருமே ஒன்றாக கலந்து கொண்டு வந்தனர்.
பிரமாண்ட திருமணம்
7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் எப்போது திருமணம் செய்ய போகிறார்கள் என்ற கேள்வி அடிக்கடி எழுந்தது.
இந்த நிலையில் இருவரும் தங்கள் திருமணம் எப்போது என அறிவித்தனர்.திருமணத்தையும் தனது காதலியும்,மனைவியுமான நயன்தாரா விரும்பியது போல் நடத்தினார் விக்னேஷ்.
கடந்த 9-ம் தேதி இவர்களின் திருமணம் தனியார் நட்சத்திர விடுதியில் பிரபல கண்ணாடி அரங்கில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகர் ரஜினி,ஷாருக்கான்,தீலிப்,அட்லி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மறுவீடு சென்ற விக்னேஷ்
திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
யார் இந்த நயன்தாரா?காதல் முதல் திருமணம் வரை - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி