என் சித்தப்பா சீமான் மீது ஆணை...பிரச்சாரத்தில் கண் சிவந்த வித்யா ராணி

Naam tamilar kachchi Seeman
By Karthick Apr 08, 2024 09:53 AM GMT
Report

நாம் தமிழர் வேட்பாளர் வித்யா ராணி நேற்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசியுள்ளார்.

வித்யா வீரப்பன்

நாம் தமிழர் கட்சியில் முக்கியமாக கவனம் பெற்ற வேட்பாளராக இருக்கின்றார் மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி. கிருஷ்ணகிரியில் வேட்பாளராக களமிறங்கபட்டிருக்கும் அவர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

vidhya-rani-emotional-speech-about-seeman

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நேற்று, கிருஷ்ணகிரியில் நாம் தமிழரின் தலைமை ஒருங்கிணைப்பாளரின் சீமான் தலைமையில் பொதுகூட்டம் நடந்தது. இதில், வித்யா ராணி பேசியது வருமாறு, இன்னைக்கு என் அப்பாவை வைத்து அரசியல் செய்த பல கட்சிகளும் என்னை கிரிமினல் பின்னணி என குற்றம்சாட்டுகிறார்கள்.

சத்தியம் 

இப்படி பேசுபவர்கள் தெம்பு, தைரியம், திராணி இருந்தால் உங்களது சொத்து பட்டியலை வெளியிடுங்கள் பார்க்கலாம். நான் வெளியிட தயார். இதுலயா தெரியலையா..? என் தந்தையின் வாழக்கை எப்படி நேர்மையானது என்று. அவர் போன வாழக்கை தடம் மாற்றப்பட்டிருக்கலாம்.

முட்டாபய...மேடையில் சட்டென பாய்ந்த தம்பி - சீரியசான சீமான்

முட்டாபய...மேடையில் சட்டென பாய்ந்த தம்பி - சீரியசான சீமான்

ஆனால் கடைசி மூச்சு வரை தான் எடுத்த கொள்கை, மக்களுக்கு அரணாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நீங்கள் பண்ணும் அயோக்கிய தனத்தை சின்ன வயதில் இருந்தே பாத்துட்டு வரேன். எங்க கிராமத்து'ல அரசாங்கம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையும் முடித்து விட்டார்கள்.

vidhya-rani-emotional-speech-about-seeman

ஒவ்வொரு வீடு தந்தை, அண்ணன், தம்பிகளை கொண்டு போய் கொன்றார்கள். இன்று வரை நியாயம் இல்லை. ஆனால், நான் விடமாட்டேன். மக்களுக்காக போராளியாக வாழ்வேன், போராளியாகவே சாவேன் இது என் அப்பா வீரப்பன் மீது சத்தியம்..என் சித்தப்பா சீமான் மீது சத்தியம்