என்ன இறக்கவில்லையா.. உயிரோடு வந்த நடிகை - ஆடிப்போன திரையுலகம்!
தான் உயிரோடுதான் இருப்பதாகவும், தன்னை தனது மகன் கொலை செய்யவில்லை என நடிகை தெரிவித்துள்ளார்.
வீணா கபூர்
நடிகையான வீணா கபூர், சொத்து தகராறால் அவரது மகனால் அடித்துக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அவரது உடலை ஆற்றில் அவர் வீசி சென்றதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, வீணா கபூரின் சச்சின், அவர் வீட்டின் பணியாளர் சோட்டு ஆகியோர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டதாகவும்,
அவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது வீணா கபூர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்றும் அவர் போலீஸில் தற்போது புகார் ஒன்றையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இறக்கவில்லை..
அதாவது வீணா கபூர் என்ற பெயரில் மற்றொரு பழம்பெரும் பாலிவுட் நடிகையும் உள்ளார். ரசிகர்கள் பலரும், உயிரிழந்த வீணா கபூரை குழப்பி, உயிருடன் இருப்பவருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சில ஊடகங்களும் தவறாக அவரின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், என் அம்மா உயிருடன் இருக்கிறார், நான் அவரை கொல்லவில்லை என மகன் தெரிவித்துள்ளார்.