பிரபல நடிகை மரணம் - சொத்துக்காக அடித்தே கொன்ற சொந்த மகன்!
பிரபல பாலிவுட் நடிகை வீணா கபூர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீணா கபூர்
மும்பையைச் சேர்ந்தவர் வீணா கபூர்(74). இவர் இந்தி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இவரது மூத்த மகன் வீணா கபூருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் போனை எடுக்காத்தால் உறவினருக்கு போன் செய்து பார்க்கும்படி கூறியுள்ளார்.
அப்போது அவர்கள் அங்கு சென்று பார்த்ததில் வீணா கபூர் இல்லை. உடனே போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர். தொடர்ந்து அவரது இளைய மகன் சச்சினிடம்(42) விசாரிக்கையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் போலீஸார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.
படுகொலை
அப்போது அவர் தாயை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், வீணா கபூருக்கு மும்பையில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி மகன் கேட்டுள்ளார். இதற்கு நடிகை மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மகன் பேஸ்பால் பேட்டால் கொடூரமாக அடித்துள்ளார். அதில் உயிரிழந்த கபூரின் உடலை பெட்டி ஒன்றில் வைத்துள்ளார். பின்பு வீட்டில் வேலை செய்த நபரின் உதவியுடன் காரில் அவரது உடலை எடுத்து காட்டில் வீசியுள்ளார்.
அதனையடுத்து, சச்சின் மற்றும் வீட்டு வேலைக்காரர் சோட்டு மண்டல் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.