போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஜராக நடிகை வரலட்சுமிக்கு N.I.A சம்மன் - அதிர்ச்சியில் திரையுலகம்!

Varalaxmi Sarathkumar Tamil Actress
By Vinothini Aug 29, 2023 08:23 AM GMT
Report

தேசிய புலனாய்வு ஏஜென்சி போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியை ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

உதவியாளர் கைது

கேரள மாநிலம், விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக இருந்தது தெரியவந்தது.

varalakshmi-summoned-to-appear-in-drug-case

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நடிகைக்கு சம்மன்

இந்நிலையில், நடிகை வரலட்சுமியின் உதவியாளர் குறித்து தகவல்களை திரட்டுவதற்காக என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகைக்கு சம்மன் விடுத்துள்ளது. தற்பொழுது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

varalakshmi-summoned-to-appear-in-drug-case

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த கும்பல் போதைப் பொருள், ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.