ஆசைக்கு இணங்க மறுத்த பழங்குடியின பெண்.. உரிமை தொகையில் கைவைத்த விஏஓ - பரபரப்பு!

Sexual harassment Crime Viluppuram
By Vinothini Nov 25, 2023 07:28 AM GMT
Report

பழங்குடியின பெண்ணுக்கு விஏஓ பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின பெண்

விழுப்புரம், விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட நல்லாபாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார் சங்கீதா என்ற இளம்பெண். இவர் பழங்குடி இனமான இருளர் இனத்தை சேர்ந்தவர். இவரது கணவர் உடல்நிலை குறைவால் கடந்த 2014ம் ஆண்டு உயிரிழந்தார்.

vao harassed tribal women

இவர்களுக்கு 11 வயதில் ஒரு கமலேஷ் என்ற மகன் உள்ளார். இந்த பெண் தனது கணவர் இறந்தால் சான்றிதழ் வாங்குவதற்காக விஏஓ ஆபீசுக்கு சென்றுள்ளார். அங்கு விஏஓ ஆரோக்கியதாஸ் என்பவரிடம் மனு தந்தபோது, இறப்பு சான்றுக்கு 5,000 ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு இவர் தன்னிடம் 1000ரூ தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

பெட்ரூமில் கணவன் செய்த செயலால் துடித்த மனைவி - கொடூர சம்பவம்!

பெட்ரூமில் கணவன் செய்த செயலால் துடித்த மனைவி - கொடூர சம்பவம்!

பாலியல் தொல்லை

இந்நிலையில், பணத்தை வாங்கிக்கொண்ட அவர் சங்கீதாவுக்கு தினமும் இரவுநேரத்தில் போனை போட்டு, ஆபாசமாக பேசியிருக்கிறார்.. லஞ்ச பணம் தராததால்தான், இப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார் என்று நினைத்து, மேலும் 3,000 ரூபாயை அந்த பெண் தந்துள்ளார். பிறகு தான் சான்றிதழை கொடுத்துள்ளார், அதன்பின்னர், மகளிர் உதவித்தொகைக்காக, சங்கீதா விண்ணப்பித்திருக்கிறார்.

vao harassed tribal women

ஆனால், இவரது விண்ணப்பத்தை பார்த்ததுமே, விஏஓ ஆரோக்கியதாஸ், ரத்து செய்துள்ளார். மேலும், அவர் தன்னுடன் பாலியல் இச்சைக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு பிறகு சங்கீதா, தன்னுடைய உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோருடன், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புகார் அளித்துள்ளார். போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர், பின்னர், விஏஓ ஆரோக்கியதாஸை சஸ்பெண்ட் செய்தும் கோட்டாட்சியர் காஜாசாகுல்அமீது உத்தரவிட்டுள்ளார்.