பேசிட்டு அப்புறமா விளக்கம் கொடுக்குறது..! ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை!! வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்!!
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறித்து தற்போது பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், வானதி ஸ்ரீனிவாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை
சில நாட்களாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கருத்துக்கள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவினர் தொடர்ந்து மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.
வானதி ஸ்ரீனிவாசன் ட்வீட்
ஆளுநர் திரு. ஆர்.என் ரவியை விமர்சனம் செய்வதாக கூறி ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், என கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுகவினர் தொடர்ந்து மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக திமுக அமைப்பு செயலாளர் @RSBharathiDMK. நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 6, 2023
ஆளுநர் திரு. ஆர்.என் ரவியை விமர்சனம்… pic.twitter.com/NnQJbLf7uP
ஒரு மாநில மக்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ். பாரதியை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதை இண்டி கூட்டணி தலைவர்கள் வரவேற்கிறார்களா ? இல்லை என்றால் இன்னும் அவரைகண்டிக்காதது ஏன்? என கருத்து தெரிவித்துள்ளார்.