மரியாதையா சொல்றேன் - இனி வாயை பொத்திட்டு இருக்கனும்!! வைரமுத்துவை சாடிய கங்கை அமரன்

By Karthick Apr 30, 2024 05:28 AM GMT
Report

இளையராஜா காப்புரிமை கேட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு வெளியில் சண்டையாக மாறியுள்ளது.

காப்புரிமை

இளையராஜா தான் இசைமையத்த பாடல்களை ஒப்பந்தம் முடிந்தும் பயன்படுத்துவதாக குறிப்பிட்டு, அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ilayaraaja case madras high court

வழக்கின் விசாரணையில், தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று தான் இளையராஜாவின் பாடல்களை இசை நிறுவனங்கள் பயன்படுத்துவதாக குறிப்பிட்டு, அதற்கு உரிமை உள்ளது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை கோரி மீண்டும் இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


அப்போது, இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எக்கோ நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அப்போது, தயாரிப்பாளரிடம் இருந்து காப்புரிமை பெற்று தான் பாடல்களை பயன்படுத்துவதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்ட நிலையில், இளையராஜா தன்னை அனைவரை விடமும் மேலானவர் என நினைக்கிறார் போலும் என சுட்டிக்காட்டப்பட்டது.

ilayaraaja case madras high court

இதற்க்கு இளையராஜா தரப்பில், ஆம் நான் அனைவர்க்கும் மேலானவன் தான் பதில் கொடுக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று நடைபெற்ற விசாரணையில், இளையராஜாவை போலவே பாடல் எழுதியர்களும் உரிமை கோரினால் என்னாவது என கேள்வி முன்வைக்கபட்டது. இளையராஜாவை விமர்சிக்கும் வகையில் அண்மையில் கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ilayaraaja case vairamuthu comment

வைரமுத்து இளையராஜாவின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தாலும், அவர் இளையராஜாவை தான் குறிக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது. இந்த சூழலில், இளையராஜாவை விமர்சித்ததற்கு கங்கை அமரன் வைரமுத்துவை விமர்சனம் செய்துள்ளார்.

மனிதா - நீ எழுப்பும் இசை!! எல்லாம் கூட்டியக்கம் - இளையராஜாவை சீண்டுகிறாரா வைரமுத்து??

மனிதா - நீ எழுப்பும் இசை!! எல்லாம் கூட்டியக்கம் - இளையராஜாவை சீண்டுகிறாரா வைரமுத்து??

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களை வளர்ந்தவர், எங்களால் தூக்கிவிடப்பட்டவர், எங்களால் lift'இல் மேலே வந்தவர். அவர் வந்த இடத்தையே காலில் மிதித்து, உட்கார்ந்த chair'ஐ தூக்கி போட்டு மிதிக்கும் படி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பாரதிராஜா சொல்லவில்லை என்றால், அவருக்கு இளையராஜா வாய்ப்பே அளித்திருக்க மாட்டார்.

vairamuthu gangai amaren

அதிகமான popularity அவரின் பாடலுக்கு வந்துவிட்டதால், அவருக்கு கர்வம் வந்துவிட்டது. தொடர்ந்து இளையராஜாவுடன் அவர் இருந்திருந்தால் இவ்வாறு இருந்திருக்க மாட்டார்.

அவர் நல்ல கவிஞர், ஆனால் நல்ல மனுஷன் கிடையாது - நல்ல புத்தி இல்லை. இனிமேல் மரியாதையாக பேசுறேன், வைரமுத்து இளையராஜா பற்றி ஏதேனும் குற்றமோ,குறையோ சொல்வதாக இருந்தால் நீங்கள் வேறு மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும். வாயை போதித்து உங்கள் வேலையே பார்த்து கொள்ளுங்கள்.