கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மரணம்

By Jon Jan 07, 2021 10:09 PM GMT
Report

போர்ச்சுக்கீஸ் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த Sonia Acevedo (41) என்ற பெண்ணுக்கு, கடந்த டிசம்பர் 30ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் சென்ற நிலையில், புத்தாண்டு தினத்தன்று திடீரென உயிரிழந்துள்ளார் இரண்டு குழந்தைகளின் தாயான Sonia.

அவருக்கு வேறு உடல் நல பிரச்சினைகளும் இல்லை, தடுப்பூசி போட்டுக்கொண்டபோது அறிகுறிகள் எதுவும் தோன்றவும் இல்லை. 

 இந்நிலையில் அவர் திடீரென மரணமடைந்துள்ளதால், அவரது தந்தையான Abilio Acevedo கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார். என் மகளின் சாவுக்கு காரணம் என்ன என தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்கிறார் Abilio.

புத்தாண்டுக்கு முந்தைய தினம் சேர்ந்து உணவருந்தியபின் வீட்டை விட்டு வெளியே போன என் மகளை நான் மீண்டும் உயிருடன் பார்க்கவில்லை என கண்ணீர் விடுகிறார் Abilio.

புத்தாண்டு தினத்தன்று காலை 11 மணியளவில் மகள் இறந்துகிடந்ததாக Abilioவுக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

Soniaவின் திடீர் மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.