பிரதமர் மோடி வேண்டுகோள் - தனது இல்லம் முன்பு தேசியக் கொடியை ஏற்றிய வி.கே.சசிகலா..!

Narendra Modi V. K. Sasikala
By Nandhini Aug 13, 2022 07:55 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார்.

தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்த பிரதமர்

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இன்று முதல் முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்க விடுங்கள் என்றும், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடியின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நடிகர்கள், நடிகைகள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பலர் தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் - ஈபிஎஸ்

பிரதமர் மோடி தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 11ம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றினார்.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனையடுத்து, இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றியிருக்கிறார்.

வீட்டில் கொடி ஏற்றிய சசிகலா

இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தனது இல்லம் முன்பாக வி.கே.சசிகலா தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.