பொண்ணு தரமாட்டோம்..இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடிய 'ஈ'க்கள்: - குமுறும் கிராமம்!

Uttar Pradesh Marriage
By Sumathi Dec 07, 2022 07:44 AM GMT
Report

ஈ காரணமாக திருமணம் நடைபெறாமல் இருப்பதாக வெளியாகிய தகவல் வைரலாகி வருகிறது.

ஈ தொல்லை

உத்தர பிரதேசம், ஹர்தோய் என்னும் பகுதியில் அமைந்துள்ளது பதைய்யன் புர்வா கிராமம். இங்கு கடந்த ஒரு வருடமாக திருமணம் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. அதுவும் இந்த கிராமத்தில் ஈக்கள் காரணமாக தான் திருமணம் செய்து கொள்ள முடியாமல் அங்குள்ளவர்கள் சிரமப் படுகிறார்களாம்.

பொண்ணு தரமாட்டோம்..இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடிய

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதியில் கோழிப் பண்ணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான், அந்த கிராமத்தில் ஈக்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கி உள்ளது. 3 ஆண்டுகளில் ஈக்கள் தொல்லை அதிகரித்ததால் மக்கள் போராட்டம் கூட நடத்தியதாகக் கூறப்படுகிறது.

No Marriage

குறிப்பாக, இந்த ஈக்கள் தொல்லை காரணமாக அந்த ஊரில் உள்ள நபர்களுக்கு யாரும் பெண் தரவும் முன் வரவில்லை என கூறப்படும் நிலையில், ஏற்கனவே திருமணம் முடிந்து அங்கே வாழ்ந்து வரும் பெண்களும் தாய் வீட்டிற்கு சென்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொண்ணு தரமாட்டோம்..இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடிய

மேலும், குயியன்ம் தாஹி, சேலம்பூர், ஜல்புர்வா, நயா கான் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களும் இதனால் அவதியுற்று வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் இதற்கு தீர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.