குர் ஆனை எரித்து வேட்பாளர் - இஸ்லாத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக சபதம்!
வேட்பாளர் ஒருவர், புனித குர்ஆனின் நகலை எரித்தது சர்ச்சையாகியிருக்கிறது.
குர் ஆன் எரிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள 31வது காங்கிரஸ் மாவட்டத் தொகுதிக்குப் போட்டியிடும் குடியரசுக் கட்சி சார்பில், வாலண்டினா கோம்ஸ் என்பவர் போட்டியிடுகிறார்.
இவர், இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் நகலை எரித்து, மாநிலத்தில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சபதம் செய்துள்ளார்.
அதிர்ச்சி வீடியோ
இதுதொடர்பான ஒரு வீடியோவில், ”டெக்சாஸில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது குறிக்கோள். முஸ்லிம்கள் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும்.
I stand by my actions & I will never bend a knee to the book that is responsible for the massacre of October 7th, took the lives of 13 U.S service members at Abbey Gate, & calls for our assassination.
— Valentina Gomez (@ValentinaForUSA) August 27, 2025
Since you love the muslims so much, why don’t you open the borders & let the… https://t.co/TlhHWZSLmd
அவர்கள் 57 முஸ்லிம் நாடுகளில் எங்கும் செல்லலாம். மேலும் தனது இலக்கை அடைய தனக்கு மக்கள் உதவ வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரத்தில், அவர் குர் ஆனை எரித்ததற்காக வருத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது அங்கு சர்ச்சையாக வெடித்துள்ளது.