உண்ணி கடித்ததால் வினை; கை, கால்களை இழந்த நபர் - கவனமா இருங்க.!
இளைஞர் ஒருவர் உண்ணி கடித்ததால் கை, கால்களை இழந்துள்ளார்.
உண்ணி கடி
அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக்கெல் கோல்ஹாஃப்(35). இவர் அடிக்கடி தனது தோழியின் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது அங்குள்ள நாயுடன் கட்டிப்பிடித்து விளையாடி வந்துள்ளார்.
அப்போது அந்த நாயின் மீது இருந்த உண்ணி (Flea) ஒன்று மைக்கெல்லின் காலில் ஏறியுள்ளது. மேலும் உடலின் பல பாகங்களில் கடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் சொறிந்துள்ளார். அதில், தோல் தடித்து ஒருவித திரவம் வந்துள்ளது.
விபரீதம்
அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். 2 வாரங்களுக்கு முன் பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கை, கால்களையும் அசைக்க முடியாமலும் போயுள்ளது. அதனையடுத்து அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போதுதான் பரிசோதித்ததில் உண்ணியால் இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கை, கால்களில் உள்ள ரத்த நாளங்களிலும் அடைப்பு ஏற்பட்டு ஊதா நிறத்தில் மாறியுள்ளது.
அவரது இரண்டு கைகளையும், கால் பாதங்களையும் அகற்றியுள்ளனர். சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு டயாலிசீஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரை காப்பாற்றுவது கடினம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.