திருட்டு சந்தேகத்தில் சிறுவனின் கை, கால்களை கம்பத்தில் கட்டி தாக்கிய அதிர்ச்சி வீடியோ வைரல்...!
திருட்டு சந்தேகத்தின் பேரில் சிறுவனின் கை, கால்களை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் கை, கால்களை கட்டி தாக்குதல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் திருட்டு சந்தேகத்தின் பேரில் ஒரு சிறுவனின் இரு கைகளையும், இரு கால்களையும் மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Minors tied to pole, thrashed over theft suspicion in Azamgarh District of Uttar Pradesh. pic.twitter.com/1Q5bsiZ8YF
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) October 23, 2022