Covid-ஐ விட மோசமானது இந்த பூஞ்சை - வெளியான பகீர் எச்சரிக்கை
ஆபத்தான பூஞ்சை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான பூஞ்சை
சீனாவைச் சேர்ந்த யுன்கிங் ஜியான் மற்றும் அவரது காதலன் ஜுன்யோங் லியு ஆகியோர் ஃபுசாரியம் கிராமினேரம் என்ற மிகவும் ஆபத்தான பூஞ்சையை புசாரியம் கிராமினேரம் (Fusarium graminearum) அமெரிக்காவுக்குள் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பூஞ்சை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணரான கோர்டன் சாங் கூறுகையில், இந்த பூஞ்சையை பயங்கரவாத வேளாண்மை ஆயுதம்.
நிபுனர் எச்சரிக்கை
இதனை அமெரிக்காவுக்குள் கொண்டு வந்து பரவ விட்டிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் கணக்கில் இழப்பை அமெரிக்கா எதிர்கொள்ளும்
மனிதர்கள் மத்தியில் கல்லீரல் பாதிப்பு, வாந்தி, மலட்டுத்தன்மை உள்ளிட்டவற்றை இந்த பூஞ்சை ஏற்படுத்தும். கொரோனா பாதிப்புகளை விடவும் மிக அதிகமான பாதிப்பை இந்த பூஞ்சை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தகவல் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.