கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உடன் திருமணம்? போட்டுடைத்த பிரபல பாலிவுட் நடிகை!
திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை ஊர்வசி ரவுடேலா பதிலளித்துள்ளார்.
ரிஷப் பண்ட்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி கேப்டில்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்து வரும் போட்டிகளில் வென்றால் டெல்லி அணிக்கு பிளே ஆப் செல்ல சிறிய வாய்ப்பு உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா என்பவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் பரவின.
திருமணம்?
இந்நிலையில் நடிகை ஊர்வசி ரவுடேலா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், ரசிகர் எழுப்பிய கேள்வி ஒன்று அவரிடம் கேட்கப்பட்டது. அதில் "நீங்கள் ரிஷப் பண்ட்டை திருமணம் செய்து கொள்வீர்களா? அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார்" என கூறியிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்த ஊர்வசி ரவுடேலா "நோ கமெண்ட்ஸ்" என்று தெரிவித்தார். அதாவது தான் பதில் அளிக்க விரும்பவில்லை என கூறிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.