சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இலங்கையின் உபுள் தரங்கா
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இலங்கையின் தொடக்க வீரரான தரங்கா. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா. சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2005ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக தரங்கா களமிறங்கினார்.
அவர் 292 போட்டிகளில் விளையாடி 9,112 ரன்களை எடுத்ததுடன், 18 சதங்களும் விளாசியுள்ளார். ஒரு நாள் போட்டி வரலாற்றில் இலங்கையின் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் தரங்கா 5வது இடத்தில் உள்ளார். 15 ஆண்டு கால கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்டில் 31 போட்டிகளில் விளையாடி 1,754 ரன்களும், 26 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 407 ரன்களும் அவர் எடுத்துள்ளார்.
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சளார்களில் ஒருவராக திகழ்ந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் (வயது 37), கடந்த சில நாட்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிட்டார். இந்நிலையில், மற்றொரு இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.