முடியை பிய்த்துக்கொண்டு சண்டையிட்ட மாமியார்,மருமகள் - கூலாக வீடியோ எடுத்த கணவன்

Uttar Pradesh
By Sumathi Jul 29, 2023 10:12 AM GMT
Report

மனைவியும், தாயும் கட்டிப் புரண்டு சண்டையிட்டதை கணவன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

தாயுடன் சண்டை

உத்தரப் பிரதேசம், அலிகரை சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவரது மனைவி ப்ரீத்தி தேவி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றன. ஆண் குழந்தை பெறாததால் மாமியாரான ராணி தேவி, ப்ரீத்தியை திட்டி அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.

முடியை பிய்த்துக்கொண்டு சண்டையிட்ட மாமியார்,மருமகள் - கூலாக வீடியோ எடுத்த கணவன் | Up Man Takes Video Of Mother Wife Fight

இந்நிலையில், இதுகுறித்த வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாகியுள்ளது. இருவரும், முடியை பிய்த்துக் கொண்டு கட்டிப்பிடித்து சண்டையிட்டனர். இதனைப் பார்த்த கணவன் சண்டையிடும் தனது தாயையும், மனைவியையும் பிரித்து விடாமல், செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

கண்டுக்காத கணவன்

மேலும், தொடர்ந்து கமெண்டும் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

 

அது தற்போது தீயாய் பரவி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் கிண்டலாக பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.