உன் பொண்டாட்டியா நானு...செருப்பு பிஞ்சிடும் - பயில்வானிடம் நடுரோட்டில் சண்டை போட்ட நடிகை...!
பயில்வான் ரங்கநாதனிடம் நடிகை ரேகா நாயர் திருவான்மியூர் கடற்கரை சாலையில் நடந்து சென்ற போது அவரிடம் சண்டையிட்ட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சை பேச்சு
சினிமா பத்திரிகையாளரும், பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் கடந்த சில காலங்களாகவே யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
சினிமா ரிப்போர்ட்டர் என்பதால், நடிகர் - நடிகைகள் சம்பந்தப்பட்ட பேட்டிகளை தந்து கொண்டிருக்கிறார் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.
நாளடைவில், அவர்களின் அந்தரங்கங்களை பேச ஆரம்பித்தார் பயில்வான்.சொந்த துறையை பற்றி, பொதுவெளியில், அநாகரீகமாக, ஆபாசமாக, அந்தரங்கங்களை, வாய்கூசாமல் இவர் பேசுவதை பார்த்து, சினிமா துறை உட்பட பொதுமக்களும் அதிர்ந்து போனார்கள்.
ராதிகா - விஜய்காந்த் பற்றி பேசி வம்பில் சிக்கி கொண்டார் பயில்வான்.. ஒருநாள் பீச்சில் எதேச்சையாக பயில்வானை சந்தித்த ராதிகா, நடுரோட்டிலேயே சண்டைக்கு போய், பயில்வானை திணறடித்துவிட்ட சம்பவமும் நடந்தது.
வி.ஜே.சித்ரா தற்கொலை
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஹேட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தனது கணவர் ஹேமந்துடன் தங்கியிருந்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரின் தற்கொலை வழக்கு தொடர்பாக வி.ஜே.சித்ரா கணவர் ஹேமந்த் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நடுரோட்டில் சண்டையிட்ட நடிகை
இதனிடையே இன்று திருவான்மியூர் கடற்கரை சாலையில் காலை நடைபயணம் மேற்கொண்ட பயில்வான் ரங்கநாதனிடம் சீரியல் நடிகை ரேகா நாயர் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த காட்சியில் நான் எப்படி வேண்டும் என்றால் நடிப்பேன் நான் உன் மகளா? உன் பொண்டாட்டியா நானு பிச்சிடுவேன் நானு..செருப்பு பிஞ்சிடும் என்று எச்சரித்தார்.
இது குறித்து ரேகா நாயர் கூறுகையில் தொடர்ந்து யூடியூப்பில் ஒவ்வொரு நடிகையை பற்றியும் அநாகரிகமாக பேசி வருகிறார்.
நான் காலை வாக்கிங் சென்றேன் எப்போதும் சனி மற்றும் ஞாயிறு தான் செல்வேன் இன்று எதார்த்தமாக சென்றேன் அப்போது எதிரில் வந்தார்.
ரேகா நாயர் பற்றி அசிங்க பேசியிருக்கீங்களே என்று கேட்டேன் அதை பார்த்திபனிடம் போய் கேளு என்றார்.
தான் இரண்டு நாட்களாக காவல்துறைக்கு கால் செய்து வருவதாகவும் ஆனால் எந்த ரெஸ்பான்சும் இல்லை என தெரிவித்தார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil
