காதலியை திருமணம் செய்ய ஆபரேஷன் செய்துக்கொண்ட பெண் - திருமணத்திற்கு முடிவு!
காதலிக்காக பெண் ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார்.
பாலின அறுவை சிகிச்சை
உத்தரப்பிரதேசம், பரேலியில் தனியார் நிறுவனம் ஒன்றில் 2 பெண்கள் பணிபுரிந்து வருகின்றன்ர். அவர்களில் ஒருவர் படவுனைச் சேர்ந்தவர், மற்றவர் பரேலியைச் சேர்ந்தவர். அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்த உடனே நண்பர்களாகியுள்ளனர்.
தொடர்ந்து நட்பு காதலாக மாறியுள்ளது. அதன்பின் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால், இதற்கு இருவீட்டாரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களில் ஒருவருக்கு மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திருமணம்
அதனையடுத்து இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய எஸ்டிஎம் சதர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வழக்கில், விண்ணப்பதாரர் பாலினத்தை மாற்றியதைத் தொடர்ந்து விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே நாங்கள் சட்டக் கருத்தைக் கேட்டுள்ளோம். இது போன்ற ஒரு வழக்கு எங்கள் முன் வருவது இதுவே முதல் முறை. இதில் சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறையை நாங்கள் அறிய விரும்புகிறோம். விண்ணப்பதாரர் பாலின மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார். என்ன செய்ய வேண்டுமோ அது விதியின்படி நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.