இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம் - அரசு அனுமதி!
திருமணம் ஆகாதவர்களும் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குழந்தை தத்தெடுப்பு
இத்தாலியில் திருமணமான தம்பதியர் மட்டுமே வெளிநாட்டு குழந்தையை தத்தெடுக்க முடியும். 1983ல் இயற்றப்பட்ட இந்த சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தின்படி மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
எனவே, இதனை எதிர்த்து குழந்தை தத்தெடுப்புக்கான இத்தாலிய சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
அதன்படி, வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் வெளிநாட்டு குழந்தைகளைத் தத்தெடுப்பது வெகுவாக குறைந்து வருகிறது. இது குடும்ப சூழலில் வளர்வதற்கான குழந்தைகளின் உரிமையை மறுப்பதாக உள்ளது. எனவே 40 ஆண்டுகளுக்கு முந்தைய சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், திருமணம் ஆகாதவர்களும் இனிமேல் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க முடியும். முன்னதாக, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், திருமணம் ஆகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்த்தர்க்கத்தில் முடிந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : அர்ச்சுனாவே காரணம் என குற்றச்சாட்டு IBC Tamil
