வாயை மூடுங்க... இல்லையென்றால் உங்க வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும் - மத்திய அமைச்சர் மிரட்டல்!

BJP Delhi India
By Vinothini Aug 04, 2023 08:36 AM GMT
Report

 பாஜக அமைச்சர் லோக்சபாவில் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம்

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்து வருகிறது, அங்கு அரவிந் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ளார். இங்கு துணை நிலை ஆளுநர் மூலம் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் செய்வதில் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே பெரிய பிரச்சனை இருந்தது.

union-minister-warned-oppositio

இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்தது, இதில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்த மசோதா நடத்தியது.

மத்திய அமைச்சர் மிரட்டல்

இந்நிலையில், சட்ட மசோதா நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதில் திமுக, காங்கிரஸ் உள்பட பல கட்சியின் எம்பி-க்கள் கலந்து கொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் ஆதரவாக பேசினர்.

union-minister-warned-oppositio

இந்த சமையத்தில், டெல்லி எம்பியும், மத்திய இணை அமைச்சர் (வெளியுறவுத்துறை மற்றும் கலாசாரத்துறை) மீனாட்சி லேகி பேசினார். அவர் கூறுகையில், "ஒரு நிமிடம். வாயை மூடி அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்" என்றும் மிரட்டியுள்ளார்.

இது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமீப காலமாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவதற்கு பின்னணியில் பாஜக தான் உள்ளது என்று எழுந்த நிலையில் இவர் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.