நாட்டின் 2வது பெரிய நகரம் திவாலானதாக அறிவிப்பு - பேரதிர்ச்சியில் மக்கள்!

United Kingdom Birmingham England
By Vinothini Sep 10, 2023 06:11 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

இரண்டாவது பெரிய நகரம் திவாலானது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து

பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரம் பர்மிங்காம், சுமார் 10 வருடங்களாகவே இதன் நிர்வாகம் அதன் செலவினங்களின் அடிப்படையில் தள்ளாட்டத்தை சந்தித்து வந்தது, இதனால் திவாலானதாக அறிவித்தது. குறிப்பாக 2010ல் சுமார் 5 ஆயிரம் பெண் ஊழியர்கள் சம ஊதியம் கேட்டு வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில் வென்றதால், அவர்களுக்கு நிதியை வழங்கியதால் சிக்கல் ஏற்பட்டது.

uk-city-birmingham-announced-bankruptcy

இவற்றுடன் கடந்தாண்டு காமன்வெல்த் போட்டிகளை தாராள செலவில் நடத்தியதும் அதன் பட்ஜெட்டில் பெரிதாக சரிந்தது. எனவே அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளை பர்மிங்காம் நகர கவுன்சில் ரத்து செய்தது.

திவால் அறிவிப்பு

இந்நிலையில், 114 பிரிவின் கீழ் அடிப்படையில் திவாலானாலும், அதன் சட்டபூர்வமான கடமைகள் தொடர இருக்கின்றன. கல்வி, குழந்தைகள் மற்றும் முதியோர் சமூக பாதுகாப்பு, குப்பைகள் சேகரிப்பு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் மட்டுமே தொடரும். மேலும், கிறிஸ்துமஸ் சந்தை வழக்கம்போல நடக்குமா என்றும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

uk-city-birmingham-announced-bankruptcy

இங்கிலாந்து அரசாங்கம் தொடர்ந்து உதவி வந்தாலும், பர்மிங்காம் கவுன்சில் முதல் பொறுப்பாளி என்பதால் தானாக முன் வந்து திவால் நிலையை அறிவித்துள்ளது. இந்த நிலை மாறுமா இல்லை இப்படியே தொடருமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.