அதை மட்டும்தான் கேட்டேன்; அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

Udhayanidhi Stalin Smt Nirmala Sitharaman Tamil nadu
By Sumathi Dec 23, 2023 02:30 PM GMT
Report

அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 வெள்ள  நிவாரணம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. மத்திய அரசு நிதி வழங்குவது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உங்க அப்பன் வீட்டு சொத்தா என கேட்கிறார்.

udhayanidhi-stalin

அவருக்கு நாவடக்கம் தேவை. இது ஒன்றும் அவுங்க அப்பா வீட்டு சொத்து இல்லை என எச்சரித்தார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், நிதியை மட்டும்தான் கேட்டேன். யாரை பற்றியும் தவறாக பேசவில்லை.

நீட் தேர்வு ரத்து..முழு பொறுப்பையும் ஏற்கிறேன், ஏமாற்றமாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வு ரத்து..முழு பொறுப்பையும் ஏற்கிறேன், ஏமாற்றமாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் கேள்வி

அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? பேரிடர் கால நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் அரசியலாக்க முயற்சிக்கிறார். உன் தவறு, என் தவறு என குற்றச்சாட்டுகளை கூறி எதையும் அரசியலாக்க விரும்பவில்லை. புயல், வெள்ள பாதிப்பை உணர்ந்து தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும்.

அதை மட்டும்தான் கேட்டேன்; அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி! | Udhayanidhi Stalin Question To Nirmala Seetharaman

ஒன்பதரை ஆண்டு மோடி ஆட்சியே பேரிடர் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் முழு வீச்சில் மீட்பு, நிவாரணப்பணிகள் நடைபெறுகிறது. வெள்ளத்தால் ஏரல் பேரூராட்சி அதிக பாதிப்பை சந்தித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.